புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பணியில் ஈடுபட்டு வந்த சுகாதார பணியாளர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு ட்ரோன் மூலம் சாக்லெட் அனுப்பி உள்ளார். புதுச்சேரி சண்முகாபுரம் அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். முத்தியால்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். வரும் 29ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தீபிகா என்ற பெண்ணுடன், இவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இந்த திருமணத்தை பெற்றோர்கள் எளிய முறையில் நடத்த இருக்கிறார்கள். சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் கணேஷ் கடந்த 3 நாட்களாக இரவு பணியில் இருந்ததால், தீபிகாவை பார்க்க முடியவில்லை, மேலும் பேச முடியாமல் இருந்துள்ளார்.