தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி அணை அருகே கால் முறிந்து அவதிப்பட்ட யானையை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு கொண்டு வந்து இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி அணை அருகே, திம்மராயனஹள்ளி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் கடந்த இருதினங்களுக்கு முன், கால் முறிந்த நிலையில் ஆண் யானை ஒன்று தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி உத்தரவின்பேரில், வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் வலி நீக்க ஊசிகள் போட்டு, உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர். பின்னர், அந்த யானையை கிரேன் மூலம் லாரியில் ஏற்றி, தேன்கனிக்கோட்டை வனச்சரகம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள கோவைபள்ளம் என்னுமிடத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வந்தனர்.