மதுரை: மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாஸ்க்கை, நாப்கின் என அமைச்சர் செல்லூர் ராஜூ மாற்றிக்கூறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை, பொன்மேனியில் உள்ள ரேஷன் கடையில் ரூ.ஆயிரம் ரொக்கம், இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, ‘‘நாள்தோறும் 100 ரேஷன்கார்டுகளுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 7 மணி வரையும் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. நியாய விலைக்கடைகளில் நாப்கின், சானிடைசர் வைத்துள்ளோம். ரேஷன் கடை பணியாளர்கள் எல்லோருக்கும் நாப்கின், சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு பெண் நாப்கின் இல்லாம இருந்தாங்க. கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.