ஓராண்டு சம்பளம் நன்கொடை: எடியூரப்பா தாராளம்

பெங்களூரு: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க PM-CARES  அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் நன்கொடை வழங்க பிரதமர் மோடடி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES  நிதியத்திற்கும், அந்தந்த மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது ஓராண்டு சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

Related Stories: