நொய்டா: நொய்டாவை சேர்ந்த தொழில் அதிபர் தனது 50 வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஒருமாத வாடகையை தள்ளுபடி செய்துள்ளார்.கொரோனா வைரசை முன்னிட்டு ஏப்ரல் 14 வரை நாடு முடக்கப்பட்டுள்ளது. தொழில்கள் அத்தனையும் முடங்கியதால் அன்றாட கூலி தொழிலாளர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அத்தனை பேரும் திண்டாடி வருகிறார்கள். அவர்கள் நலனுக்காக மத்திய அரசு ₹1.70 லட்சம் நிவாரணம் அறிவித்து இருந்தாலும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த முடக்கம் கடினமான நேரமாக கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சலுகைகளை அறிவித்து வருகிறார்கள். மேலும் மத்திய அரசுக்கு நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்தநிலையில் நொய்டாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் தனக்கு சொந்தமான 50 வீடுகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மாத வாடகை வேண்டாம் என்று அறிவித்து உள்ளார்.