வேதாரண்யம்: கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நீர்நிலைகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதித்து வேதாரண்யம் நகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, மேலாளர் மீராமன் சூர் உள்ளிட்ட பணியாளர்கள் தீவிரமாக எடுத்து வருகின்றனர். கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்கள் வீடுகளில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தல், அத்தியாவசிய தேவையான பொருட்களை வாங்குவதற்கு முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.