பள்ளிப்பட்டு: ஊரடங்கு உத்தரவை மீறி பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மக்கள் கும்பலாக வருவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமின்றி, பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தது. இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் மற்றும் கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கூட்டமாக பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.