டெல்லி: கொரோனா எதிரொலி காரணமாக எல்ஐசி பிரீமியம் தொகையை செலுத்த ஏப்.15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பில் உள்ள காப்பீடுகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான பாலிசிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது. ஏப்.15 வரை இணையதளம் மூலமும் பிரீமியம் தொகையை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.