புதுச்சேரி: புதுச்சேரியில் 3 மருந்தகங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கூடுதல் விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த 2,883 முக கவசங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. புதுவையில் முக கவசம் மற்றும் கிருமி நாசினி தடுப்பு பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் அருண் உத்தரவின்பேரில், சட்டமுறை மற்றும் எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி தயாளன் தலைமையிலான குழுவினர் கடந்த ஒரு வாரமாக புதுவையில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருந்து மற்றும் பார்மசிஸ்ட் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 3 கடைகளில் மாஸ்க் (முக கவசம்) பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.