சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின மக்கள் மற்றும் ஊடகங்கள் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பான புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி மீது தேனாம்பேட்டை காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், தான் பேசியது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகாது.