பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ஞானமணி நகரை சேர்ந்தவர் கண்ணன் (48). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், மேலும் ஜீவா (19) மற்றும் 12 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். கண்ணன் அதே பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் கண்ணன், தன்னுடன் வேலை செய்து வந்த யுவராணி என்பவருடைய மகள் கல்பனா (19) என்ற பெண்ணை அழைத்து சென்று, செங்கல்பட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இதுபற்றி அறிந்த அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மகள் ஜீவா ஆகியோர் தங்களுடன் வருமாறு கண்ணனை அழைத்தனர். அப்போது மனைவி, மகள் என்றும் பாராமல் கண்ணன் அவர்களை கடுமையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவரது மனைவி மஞ்சுளா, நேற்று 10க்கும் மேற்பட்ட மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.