தர்மபுரி: பாப்பாரப்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விவசாயிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹50ஆயிரம் அபராதமும் விதித்து தர்மபுரி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஓஜி.அள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம்(65). இவர் கடந்த 2018ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படித்து வரும் மாணவியை குண்டுக்கட்டாக தூக்கி சென்று, மறைவான இடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.