வயலில் தூங்கிய பிரான்ஸ் வாலிபர்

திருவனந்தபுரம்: பிரான்சை சேர்ந்தவர் யுவான் ஜாக்விஸ்.  சைக்கிளில் நாடுகளை சுற்றி வருகிறார். இவர் சென்னையில் இருந்து 2 நாட்களுக்கு முன் பாலக்காடு  வந்துள்ளார்.  கொடுவாயூர் பகுதியில்  மிகவும்  களைப்படைந்தார். இதனால் வயலில் படுத்து  தூங்கி விட்டார். இரவு முழுவதும் அவர் எழும்பவில்லை. இந்த நிலையில்  நேற்று முன்தினம் காலை  வயலுக்கு வந்த தொழிலாளர்கள் வெளிநாட்டுக்காரர் வயலில் படுத்து  கிடப்பதை பார்த்து, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மயங்கி  விழுந்துவிட்டார் என்று நினைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அவர்கள் வந்து விசாரித்த போது உண்மை தெரிந்தது. எனினும்,  பாலக்காடு அரசு  மருத்துவமனையில் அவர் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்.

Related Stories: