லாகூர்: பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில், லாகூர் அணிக்காக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் சதமடித்து தனது அணியை அரையிறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார். கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேலான லீக் போட்டிகள் முடிந்து விட்டன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக அனைத்து வெளிநாட்டு வீரர்களும் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும், ரசிகர்களும் மைதானத்திற்கு வந்தபாடில்லை. அதனால் போட்டிகள் அனைத்தும் மூடிய மைதானத்திற்குள் நடைபெற்று வந்தநிலையில், தற்போது அதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அரையிறுதி போட்டி நடப்பதற்கு முன்னதாகவே கிறிஸ் லின் திடீரென பாகிஸ்தானில் இருந்து தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கிரிக்கெட்டைவிட வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.