முதல்வருடன் தமிழக பாஜ தலைவர் திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜ தலைவர் முருகன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். தமிழக பாஜ தலைவராக கடந்த 13ம் தேதி தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் முருகன் பொறுப்பேற்று கொண்டார். நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.  இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது பாஜ மாநில வரவேற்பு குழு தலைவர் ராத்மா சங்கர், சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: