ஜோலார்பேட்டை: காட்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நகைக்கடைக்காரரிடம் 1.50 கோடி மதிப்பிலான சுமார் 5 கிலோ தங்க நகைகள் திருட்டு போனது. எல்லை பிரச்னையால் 10 மாதங்களுக்கு பிறகு ஜோலார்பேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சஞ்ஜய் ஜெயின். இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி சென்னையிலிருந்து பெங்களூருக்கு, பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது அதிகாலை 2 மணி அளவில் எழுந்து பார்த்தார். அப்போது அவர் ைவத்திருந்த பை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் 1.50 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்க நகைகள் இருந்ததாம்.