பாரீஸ்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீரர் ரூடி கோபர்ட் (27) தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், ‘கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை புறக்கணிக்கிறேன். இதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை’ என்று தெரிவித்தார். மேலும், கோபர்ட் சமூக ஊடகங்களில் கொரோனா குறித்து அவதூறுகளை பரப்புவதாக கண்டனங்கள் எழுந்தன. திடீர் திருப்பமாக, பதிவு வெளியிட்ட சில மணி நேரங்களில் ரூடி கோபர்ட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் வௌியாகின.
ஓக்லஹோமா நகரத்தில் விளையாட திட்டமிட்டிருந்த போட்டிக்கு முன்னதாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. கோபர்ட் தனது லாக்கர் அறையில், மற்ற வீரர்களையும் அவர்களின் உடமைகளையும் தொட்டதால் வைரஸ் பாதிப்புக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மற்றொரு வீரரான டொனோவன் மிட்செல்லுக்கு நோய் தொற்று இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டதால், அவர் மூலம் கோபர்ட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.