புதுடெல்லி: மத்திய அரச ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து, 21 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பணவீக்கத்தால் ஏற்படும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தப்படுவது வழக்கம். குறைந்தது ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அடிப்படை சம்பளம் மற்றும் கிரேடு சம்பளத்தில், ஒரு குறிப்பிட்ட சதவீதம் இந்த அகவிலைப்படியாக நிர்ணயிக்கப்படுகிறது. 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, 5 சதவீதம் உயர்த்தி 19 சதவீதமாக வழங்க கடந்தாண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போதைய பணவீக்கம் மற்றும் விலைவாசி நிலைக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை எவ்வளவு சதவீதம் உயர்த்தலாம் என்பது குறித்து மத்திய அமைச்சரவை குழு நேற்று ஆலோசனை நடத்தியது.