புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினர், இந்தியா வர வழங்கப்பட்ட விசா ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் ஐபிஎல் டி20 போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ‘ஏப்.15ம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்’ என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.