சென்னை: அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விளவங்கோடு தொகுதி விஜயதரணி (காங்கிரஸ்) பேசியதாவது: பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம் பொதுப்பணித்துறையின் மூலம் உரிய மதிப்பீடு செய்து, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன் : நபார்டு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து தனியார் நிறுவனங்களின் உதவி பெற்று ரூ.482 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.