கொல்கத்தா: வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு படகு ஒன்று ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது.மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றில் தவறுதலாக வங்கதேசத்தை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு படகு ஒன்று வந்தது. இந்த படகு கொல்கத்தாவில் எதிர்பாராதவிதமாக கப்பல் மீது மோதியது. பின்னர் வந்த படகு, அக்ரா அருகே ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது. சரக்கு படகு மோதியதால் கப்பலும் சேதமடைந்தது.