திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகனின் சித்தப்பா கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆந்திராவின், புலிவெந்துலாவில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகனின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரிக்க அப்போதைய முதல்வர் சந்திரபாபு, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார். அதன்படி, விசாரணை நடந்து வந்த நிலையில் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன்மோகன் முதல்வர் ஆனார். பின்னர் சந்திரபாபு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவை கலைத்து தனி புலனாய்வு குழுவை ஜெகன்மோகன் அரசு அமைத்தது. இந்த குழுவினர் முன்னாள் அமைச்சர் ஆதிநாராயணரெட்டி, கடப்பா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி அவினாஷ் ரெட்டி உள்பட 1,400 பேரிடம் விசாரணை நடத்தினர்.