சென்னை: வரி வழக்குகளை சுமூகமாக தீர்த்துக்கொள்ள ‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் ஆயகர் பவன் வைகை ஹாலில் உள்ள வருமானவரி துறை அலுவலகத்தில் இந்திய பட்டய கணக்காயர் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சில் (எஸ்ஐஆர்சி) நேற்று ஏற்பாடு செய்தது. இதை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை ஆணையர் அனு ஜெ.சிங் துவக்கி வைத்தார்.