திருவாடானை: திருவாடானை அருகே வயலில் வைத்த தீயால், 25 ஆட்டுக்குட்டிகள் பட்டியிலேயே பரிதாபமாக கருகி இறந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகூரான், முருகேசன். இவர்கள் மயிலாடுவயல் கிராம வயலில், 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளுடன் கிடை போட்டுள்ளனர். நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அனுப்பி விட்டு 25 ஆட்டுக்குட்டிகளை பெரிய ஓலைகளால் வேயப்பட்ட குடுவையில் கொண்டு மூடி விட்டு சென்று விட்டனர்.