பரூய்பூர்: மேற்கு வங்க மாநிலம், 24 பர்கனாஸ் மாவட்டத்தில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் இரு கும்பல்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு, கடந்த 2018ம் ஆண்டு முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்த சிறை கட்டிடத்தின் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர்.