மதுரை: தாமிரபரணி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்கவும், ஆற்றங்கரை ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோரிடம் நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தரப்பில் அரசு தரப்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.