கோவில் வாசலில் கருவை முள், உடைமுள், இலந்தை முள், கத்தாழை முள், சப்பாத்தி கள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு முள் படுக்கை அமைக்கப்பட்டது. முன்னதாக பத்ரகாளியம்மன் உச்சி மாகாளியம்மனுக்கு விரதம் மேற்கொண்ட பூசாரி ஜெயபால் சிறப்பு பூஜைகள் செய்தார். அதனைத்தொடர்ந்து மேள தாளம் முழங்க பூசாரி ஜெயபாலை பக்தர்கள் முள் படுக்கைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் முள் படுக்கையில் ஏறி அமர்ந்தும், படுத்தும் அருள் வந்து ஆடியபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதனைக் காணவும், அருள்வாக்கு பெறவும் சென்னை, கோவில்பட்டி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவில் முள்படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பூசாரி appeared first on Dinakaran.