கரூர்: கரூர் சரஸ்வதி வித்யாலாயா நர்சரி மற்றும பிரைமரி பள்ளி மாணவர்கள் சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் அனிதா தலைமை வகித்தார். மாணவி தீபதர்ஷினி கலந்து கொண்டு அறிவியல் தினம் குறித்து பேசினார். மாணவி மதுமதி அறிவியலாளர்களையும், அவர்கள் கண்டுபிடிப்புகள் குறித்தும் பேசினார். பள்ளியில் 800 மாணவர்கள் இணைந்து ஏவுகணை நாயகன் அப்துல்கலாமின் முகமூடி அணிந்து நேஷனல் சயின்ஸ் டே என்ற எழுத்துக்களால் வடிவமைத்து நின்றது அனைவரையும் கவர்ந்தது.