பெங்களூரு: கர்நாடகாவில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகிய இரு பதவிகளை சித்தராமையா வகித்து வருகிறார். கடந்த இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்து கடிதத்தை கட்சி மேலிட தலைவர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த ராஜினாமா கடிதத்தை மேலிடம் ஏற்கவில்லை. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் பதவியை பிரிக்க வேண்டும் என்று மேலிடத்தை கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.