புதுடெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மீது தேசத் துரோக வழக்கு தொடர, டெல்லி அரசு அனுமதித்து உள்ளதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவின் நினைவு தின நிகழ்ச்சி, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசத் துரோக கோஷங்கள் எழுப்பியதாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உட்பட சிலர் மீது கடந்தாண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.