உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி துபாய் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தையை மீட்டு வந்தது சிபிஐ : தாய்-தந்தை மோதலில் தவிக்கும் பரிதாபம்

புதுடெல்லி: டெல்லியைச் ேசர்ந்த தம்பதி அமன் லோகியா-கிரன் கவுர். இவர்களுக்கு ரெய்னா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. துபாயில் பணியாற்றிய லோகியாவும், கவுருக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். குழந்தை தாய்  பராமரிப்பில் இருக்க வேண்டும் எனவும், வாரத்துக்கு 3 நாட்கள்ரெய்னாவை லோகியா பார்க்கலாம் எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

ஆனால்,கடந்த ஆண்டு குழந்தையை பார்க்கச் சென்ற லோகியா,  துபாய்க்கு அழைத்துச் சென்று விட்டார். இந்த வழக்கு சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தையை சிபிஐ அதிகாரிகள் துபாய் சென்று மீட்டு வந்துள்ளனர். இந்த  குழந்தை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

Related Stories: