சென்னை: வீட்டு வசதி வாரியம் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர், கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த வீட்டை தமிழக அரசு அவருக்கு இலவசமாக வழங்கியது. இது என் கொள்கைக்கு எதிரானது என்று கூறி இலவசமாக கொடுத்த வீட்டுக்கு, வாடகை கட்டி வந்தார் நல்லகண்ணு. இந்தநிலையில், 1953ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மிகவும் பழுதாகி இருந்ததால் அதில் குடியிருந்தவர்கள் காலி செய்யும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நல்லகண்ணு, அங்கிருந்த மற்ற குடியிருப்பு வாசிகளைப்போல வெளியேறினார். இதையடுத்து, அவர் கே.கே.நகரில் உள்ள வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்தார்.
வீட்டு வசதி வாரியம் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு
- Nallakannu
- மாநில மாளிகை
- இந்தியன்
- கம்யூனிஸ்ட்
- வீட்டு வாரியம்
- இந்திய கம்யூனிஸ்ட்டின் வீட்டுவசதி வாரியம்
- அரசாங்க வீடு