புதுடெல்லி: டெல்லியில் மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம், பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கிறோம் என காவல் இணை ஆணையர் ஓ.பி.மிஷ்ரா கூறியுள்ளார். டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளான சாந்த்பாக், ஜாஃப்ராபாத், பஜன்புரா, யமுனாவிஹார், மற்றும் மஜ்பூரில் தொடா்ந்து பதற்றம் நிலவியதை அடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர், துணை ராணுவத்தினா் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் சாந்த்பாக் பகுதியில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஓ.பி.மிஷ்ரா, மைக் மூலம் மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மளிகை, மருத்துவம் மற்றும் பிற கடைகளை தாராளமாக திறக்கலாம். தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வெளியே வரலாம். மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம். தங்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உள்ளது. தயவுசெய்து யாரும் குழுக்களாக கூட வேண்டாம். குறிப்பாக, இளஞர்களை இதனை செய்ய வேண்டாம்.
டெல்லியில் மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம், பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கிறோம்: காவல் இணை ஆணையர் ஓ.பி.மிஷ்ரா பேச்சு
- தில்லி
- கூட்டு ஆணையாளர்
- பாதுகாப்பு
- பொலிஸ் ஆணையாளர்
- OP மிஸ்ரா
- திறந்திருங்கள்
- MedicalShops
- OPMishra மளிகை அறிவிக்கிறது