கிருஷ்ணகிரி: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம், சாம்பல் புதனுடன் தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூய ஃபாத்திமா அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்று நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டு தவமுயற்சிகளை தொடங்கினர். திண்டுக்கல் மாவட்டத்தில் செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடங்கினர். நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்ல் புதனையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.