மதுரை: நெல்லை மாவட்டம், கல்லிடைகுறிச்சி, கேட்வாசல் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வி (41). மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றினார். கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்தார். கடந்த 29.9.2008 அன்று இரவு தமிழ்செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம கும்பல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது. அந்தக் கும்பல் தமிழ்செல்வியின் வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீட்டில் இருந்த நகையை கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். விசாரணையில், தமிழ்செல்வி பலாத்காரம் ெசய்யப்பட்டு கொலையானதும், 67 கிராம் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக கல்லிடைக்குறிச்சி கார்த்திக் (21), மகேந்திரன் (24), வசந்தகுமார் (30), ராஜேஷ் (27), கணேசன், சின்னத்துரை (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.