விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி மற்றும் கழிவு வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த நவம்பர் மாதம் விழுப்புரம் மாதா கோயில் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த பழமை வாய்ந்த அரச மரத்தை அகற்ற முற்பட்டபோது அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பு மாதா கோயில் நிறுத்தம் அருகே இருந்த பழமை வாய்ந்த அரச மரம் அகற்றப்பட்டது.