கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாகவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் சில மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி வருகின்றனர். கே.வி.குப்பம் அருகே உள்ள வேப்பங்கனேரி கிராம தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் இதுபோன்று மரங்களை வெட்டும் பணி நடந்தது. அப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.