கோவை: கோவையில் சுவீடனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பிச்சை எடுத்து சாப்பிட்டு வருகிறார். சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் கிம். (40). தொழிலதிபர். சுவீடனில் இவருக்கு தோட்டங்கள், பங்களா, கார்கள் உள்ளன. ராஜ வாழக்கை பிடிக்காமல் சந்நியாசியாக வாழ ஆசைப்பட்டு அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்த அவர் கோவையில் ஒரு தியான மையத்தில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து கோவையில் ரயில்நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுத்து சாப்பிட்டு வருகிறார். இவர் பொது இடங்களில் தங்குவார்.