ஐதராபாத்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஓவைசி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், தேசிய குடியுரிமை பதிவேடு ( என்.ஆர்.சி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கும் பரவலாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்க்க வேண்டும் என்று ஐதராபாத் எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: அசாதுதின் ஓவைசி வலியுறுத்தல்
- குடியுரிமை திருத்தச் சட்டம்: அசாதுதீன் ஒவைசி ஜெகன் மோகன் ரெட்டி
- குடியுரிமை திருத்தச் சட்டம்: அசாதுதீன் ஒவைசி