வேளச்சேரி: பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் சவுமியா நகர் 3வது தெருவில் உள்ள பூங்கா அருகே, நேற்று முன்தினம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பூங்கா அரு கே ஒரு வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு கட்டுமான பணியில் ஆந்திரா, மேற்கு வங்காளம், திருவண்ணாமலை போன்ற பகுதியை சேர்ந்த 6 பேர் தங்கி வேலை செய்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்தனர்.