முன்னாள் எம்பி தபஸ் பால் மறைவு

கொல்கத்தா: வங்கமொழி திரைப்பட நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி.யுமான தபஸ் பால் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61. மேற்கு வங்கத்த்தில் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்த தபஸ் பால், வங்காள திரையுலகில் புகழ் பெற்றவராக விளங்கினார். பின்னர், அவர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்பி.யானார். கடந்த 2016ம் ஆண்டு ரோஸ் வேலி நிதி நிறுவன மோசடி தொடர்பாக சிபிஐ அவரை கைது செய்தது. இதனால், திரையுலகம், அரசியலில் இருந்து விலகினார். இதயநோய் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், 2 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று அவர் இறந்தார். அவரது மறைவுக்கு  தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: