ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தடையை மீறி விபிஎன் மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க மொபைல் போன், இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு இயல்பு நிலை திரும்பியதால் முதலில் தரைவழி தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது. அதன்பின் கடந்த 25ம் தேதி முதல் மொபைல் போன் சேவை, இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. எனினும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு இணையதள சேவை முடக்கப்பட்டு பின் இணைய சேவை வழங்கப்பட்டாலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தடைகளை மீறி விபிஎன் (Virtual Private Networks) மூலமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் சிலர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.