சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வுகளில் முறைகேடாக பணம் கொடுத்து தேர்வு எழுதிய நபர்கள் மற்றும் குரூப்2ஏ, விஏஓ தேர்வில் வெற்றி பெற்று பணியில் உள்ள நபர்கள் என மொத்தம் நேற்று முன்தினம் வரை 45 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். விஏஓ தேர்வில் இடைத்தரகர் ஜெயகுமார் ஆலோசனைப்படி முறைகேடாக ரூ.9 லட்சம் பணம் கொடுத்து வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த அனிலாடியை சேர்ந்த அமல்ராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.