டெல்லி தோல்வியில் இருந்து மீண்டு காங்கிரஸ் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

கொச்சி:  காங்கிரசின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பி.யுமான ஜெய்ராம் ரமேஷ், கொச்சியில் நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் தலைவர்கள் தாங்களாகவே தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பொருத்தமாக இருக்க, காங்கிரஸ் கட்சியும் தன்னைத்தானே புதுப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் பொருத்தம் இல்லாதவர்களாகி விடுவோம. நமது ஆணவம் போக வேண்டும். அதிகாரத்தை இழந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், இன்னும் நம்மில் சிலர் அமைச்சர்களாகவே தங்களை கருதிக் கொள்கிறார்கள். உள்ளூர் மட்டத் தலைவர்களை ஊக்குவித்து வளர்க்க வேண்டும். அவர்ளுக்கு சுதந்திரத்தையும், தன்னாட்சி அதிகாரத்தையும் தர வேண்டும். நம் தலைமைத்துவத்தின் பாணியும், சாராம்சமும் மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: