சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் பாமேட் காவல் நிலையத்தின் கீழ் உள்ள இரப்பள்ளி கிராமத்தின் காடுகளில் நக்சல்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சி.ஆர்.பி.எப்.-ன் கோப்ரா படையின் 204வது பிரிவு வீரர்கள் காலை 10.30 மணயளவில் அப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சல்கள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சத்தீஸ்கரில் தேடுதல் வேட்டையின்போது நக்சலைட்டுகள் தாக்குதல்: கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்!
- தாக்குதல்
- நக்சலைட்டுகள்
- சத்தீஸ்கர்
- வீரர்கள்
- பணியாளர்கள்
- என்கவுண்டர்
- சிஆர்பிஎஃப்
- கோப்ரா கமாண்டோ
- பிஜப்பூர்