திருவனந்தபுரம்: பந்தளம் அரண்மனையில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் திருவாபரணத்தை அரசு ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் மகரவிளக்கு பூஜையையொட்டி திருவாபரணம் அணிவித்து தீபாராதனை நடத்தப்படும். அப்போது பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு தெரியும். இந்த திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக திருவாபரணம் பேடகங்களில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்படும் சபரிமலை திருவாபரணத்தை அரசு ஏற்க தேவையில்லை: கேரள தேவசம்போர்டு அமைச்சர் பேட்டி
- அரசு
- கேரள தேவஸ்போர்ட் வாரியம்
- பேட்டியில்
- Sabarimalai
- பந்தளம் அரண்மனை
- அமைச்சர்
- கேரள தேவஸ்போர்ட்
- சபரிமலை திரும்பும்