ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையம் மீது கையெறி குண்டுவீச்சு

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் போலீசார் ஒருவர் காயமடைந்தார்.  ஜம்மு காஷ்மீரின் ஷெல்டங் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும், தீவிரவாதி ஒருவனை வீரர்கள் உயிருடன் பிடித்தனர். இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள லால் பஜார் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நேற்று ைகயெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு காவல் நிலையம் அருகே இருந்த குப்பைமேடு மீது விழுந்து வெடித்தது. இதில், அருகில் நின்றிருந்த காவலர் ஒருவர் காயமடைந்தார். இது குறித்து காவல் துறை சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்பட்டவில்லை.

Related Stories: