புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் சாம்பசிவம் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்பசிவம் கொலை தொடர்பாக அன்பு, அமுதன் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. சாம்பசிவம் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் கைது செய்ய வந்த போது தப்பி ஓட முயன்ற அன்பு மற்றும் அமுதன் கீழே விழுந்ததில் கை முறிந்தது.

Related Stories: