லாகூர்: பாகிஸ்தானில் இந்து கோயிலை சேதப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் மீதான புகார் திரும்பப் பெறப்பட்டதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோயிலின் சிலையை, 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் கடந்த 26ம் தேதி சேதப்படுத்தியதாக பிரேம் குமார் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 4 சிறுவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.