இதில் சிக்கி நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். சாலைகள் தெரியாத அளவிற்கு காணும் இடங்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 11,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதமாக பெய்யும் கனமழை இயற்கை பேரிடராக மாறிவிட்டது. ஒரு மாதமாக பெய்யும் கனமழையில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தகவல் அளித்துள்ளது. சுமார் 1 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். துபாய், சீனாவை தொடர்ந்து, கென்யாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
The post எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல் appeared first on Dinakaran.